UVSS Function VR 360

For full view of this photos, Please click on top left ”Google வரைபடத்தில் பார்க்க” in blue letters

Posted in ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம், Nellai Eruvadi Tamilnadu, NEW LIFE HOME FOR AGED DESTITUTES, Sisulthan, UNITED VOLUNTEERS SERVICE SOCIETY | Leave a comment

திருகுரானில் தாய்தந்தையர்க்கு மரியாதை

10585260_766137136785626_252220274_n 10735776_766137123452294_1375005035_n 10744596_766137146785625_722548796_n 10743396_766137180118955_742917525_n

Posted in NEW LIFE HOME FOR AGED DESTITUTES | Tagged | Leave a comment

விழுதுகளால் நிராகரிக்கப்படும் வேர்கள்

20150615a_012107007

Posted in NEW LIFE HOME FOR AGED DESTITUTES | Leave a comment

இன்று அவர்கள்… நாளை நீங்கள்!

இன்று அவர்கள்… நாளை நீங்கள்!

லக மக்கள் தொகையில் 8 சதவிகிதத்தினர் முதியோர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டில் 15 வயதுக்குட்டவர்களை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஜ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி உலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு முதியோர்களை குறித்த செய்திகளை பட்டியிலிடும் போது உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய அம்மா, அப்பாவை மறந்து விட்ட கொடூர உள்ளங்களும் இந்த சமுதாயத்தில் இருப்பதையும் குறிப்பிட வேண்டியதுள்ளது.
‘தாயின் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்றெல்லாம் பெற்றோருக்கு புகழாரம் சூட்டும் நம்நாட்டின் தான் பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் அவலமும் அரங்கேறுகிறது. வறுமையின் காரணமாக பெற்றோர்கள் புறக்கணித்ததாக 60 சதவிகிதத்தினர் சொல்கிறார்கள். வறுமையின் நடுவே தான் அந்த பெற்றோர்கள் அவர்களை வளர்த்தார்கள் என்பது மட்டும் 60 சதவிதத்தினருக்கு ஏன் புரியவில்லை. மற்ற 40 சதவிகிதத்தினர் வேலையின் காரணமாக நகரத்துக்குக்கு குடியேறியதால் பெற்றோரை கவனிக்க வீடுகளில் இடவசதியில்லை. கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பெற்றோரை அழைத்து வர முடியவில்லை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் புறக்கணிக்கப்படும் முதியவர்களை அரவணைக்க 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன. இதில் சில இல்லங்கள் கட்டண அடிப்படையில் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் 180 இல்லங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இல்லங்களில் தங்கி இருக்கும் ஒவ்வொரு முதியோருக்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது.
பெற்ற குழந்தைகளுக்காக ஓடாய் உழைத்து தேய்ந்த பெற்றோரை இளைய சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுப்பது வேதனைக்குரியது. மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி என உறவின் வட்டம் விரிந்திருந்தாலும் பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் ஒரு அறைக்குள் முடங்கி கிடக்கும் முதியோர்கள் பலர். அந்த அறை சிறைவாசம் கொடுமையானது. கொடூரமானது.
முதியோர்களுக்காக முதியோர் உதவி தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் பயன்பெற முடியாமல் நடையாய் நடக்கும் முதியோர்கள் பலர். இதிலும் ஆயிரத்தெட்டு நடைமுறைகள். அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு ஒரங்கப்பட்ட முதியோர்கள் பலர் இருக்கிறார்கள். முதியோர்களின் நலனுக்காக கடந்த 2007ல் முதியோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி சட்டபூர்வமான வாரிசுகள் பெற்றோரை கவனிக்கவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு 70 சதவிகித முதியோர்களிடம் இல்லை. மீதமுள்ளவர்கள் தன்னுடைய குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க விரும்புவதில்லை. இதனால் இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடந்த 2010 ஜூன் மாதத்தில் சென்னை பட்டாளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற முதியவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மகன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சட்டத்தின் கைது செய்யப்படுபவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
சொந்த பிள்ளைகளால் பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் தனிக்குடும்ப முறை. கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றைய அவசர கலியுகத்தில் கணவனும், மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் பெற்றோர்களை கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோர்களை தனிமை வாட்டுகிறது. மனம்விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள். சில குடும்பங்களில் மாமியார், மருமகள் பிரச்னை காரணமாக இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் சொத்து பிரச்னையும் முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்கள் செல்ல வழிவகிக்கிறது. இப்படி ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு சூழ்நிலை காரணமாக முதியோர் இல்லங்கள் இன்று நிரம்பி வழிகின்றன.
வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம். ஆனால் அந்த அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் என்பார்கள். மனித வாழ்க்கை ஒரு சங்கிலித் தொடர் போன்றது. குழந்தையாய் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மீண்டும் வயதாகி குழந்தையைப் போல மரணத்தை தழுவதே வாழ்க்கை. விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் குடும்பங்களிலும், சமூகத்திலும் பிரச்னைகள் ஏற்படாது. ஆனால் தன்னை ஆளாக்கிய அந்த தெய்வத்தையே அனாதையாக்கி விட்டு வாழ்கிறது வாழ்க்கை அல்ல.
முதியோர் நலுனுக்காக பாடுபடும் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற என்.ஜி.ஓ.வின் சென்னை இணை இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், “முதியோருக்கு உதவிக்கரமாக இந்த அமைப்பு செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட முதியோர்கள் 1253 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். சென்னையில் இந்த எண்ணுக்கு தினமும் 10 போன் அழைப்புகள் வருகின்றன. வறுமையே முதியோர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை இளைஞர்கள் மத்தியிலும், முதியோர்களுக்கும் ஏற்படுத்தி வருகிறோம். முதுமைப்பருவத்தை எப்படி வாழ வேண்டும் என்பதை திட்டமிட வழிமுறைகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி பிள்ளைகள் மட்டுமல்ல வீடுகளிலேயே பல முதியோர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கஅம்மா, அப்பா, முதியோர், அன்னை இல்லம்ள்” என்றார் வேதனையுடன்.
சமூக சேவகர் டி.பொன்சேகர் கூறுகையில், “ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும். இன்று அவர்கள் என்றால் நாளை நீங்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் தன்னுடைய கடமையை செய்தாலே போதும். கோயில், குளங்களுக்கு சென்று புண்ணியம் தேட வேண்டிய அவசியமில்லை” என்றார்.
காசு இருந்தால் எல்லாத்தையும் வாங்கி விடலாம். ஆனால் அம்மா, அப்பா என்ற உறவை வாங்க முடியுமா? -எஸ்.மகேஷ்

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=45433

Posted in ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம், NEW LIFE HOME FOR AGED DESTITUTES, UNITED VOLUNTEERS SERVICE SOCIETY | Leave a comment

அம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி

அம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி

Posted in NEW LIFE HOME FOR AGED DESTITUTES | Leave a comment

முதியோர் இல்லம்

This gallery contains 1 photo.

எழுத்தாளர்: இராமியா  சிந்தனையாளன் – ஆகஸ்ட் 2014 சென்னை நகருக்கு அடுத்து உள்ள சோழிங்கநல்லுரில், பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து மேற்கில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த முதியோர் இல்லம் அமைந்து இருந்தது. அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பெரிய கட்டடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அப்பகுதி … Continue reading

More Galleries | Tagged , | Leave a comment

பாகீரதி… பாகீரதி… – சிறுகதை

This gallery contains 1 photo.

‘சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. ‘அடுத்த இஷ்யூ… முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று ‘மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என … Continue reading

More Galleries | Leave a comment

நபி மொழி

This gallery contains 1 photo.

More Galleries | Leave a comment

October 2013

uvss oct 13 001uvss oct 13 008uvss oct 13 003uvss oct 13 004uvss oct 13 005uvss oct 13 006

uvss oct 13 007uvss oct 13 002

Posted in NEW LIFE HOME FOR AGED DESTITUTES | Leave a comment

அவன் மூக்கு மண்ணாகட்டும்..!

16 18

Posted in NEW LIFE HOME FOR AGED DESTITUTES | Leave a comment

அந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.

Screen Shot 2013-12-19 at 7.50.06 AM
Stanley Rajan
அந்த இளைஞனுக்கு அப்போது 17 வயது, தொடக்ககல்வி அப்போதே படித்திருந்தான்,1920களில் வள்ளியூர் பகுதியில் ஆங்கிலம் பேசும் அளவிற்கு கொஞ்சம் படித்திருந்தான்.

1925ல் ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகை நேரம், மும்பையில் “கேட் ஆப் இண்டியா” கட்டடம் எல்லாம் கட்டி மன்னரை வரவேற்க பிரிட்டிஷ் இந்தியா தயாராகிறது, எங்கும் விழாக்கோலம், எங்கும் மன்னர் பற்றிய பேச்சு.

அழைக்காமல் இந்தியாவிற்கு ஒரு விருந்தாளி வந்தார், அவர் பெயர் பஞ்சம். வந்ததும் வேலை தொடங்கினார், கிடைத்தது வறுமை.

ஆட்சியாளர்களின் சிந்தனை எல்லாம் இன்றைய தமிழக அமைச்சர்கள் போல, மேலிடத்தை மகிழ்விப்பது எப்படி என்றே இருந்தது, இந்திய பஞ்சம் அவர்களுக்கு காங்கிரஸ் ஈழ பிரச்சினைய கையாள்வது போல, ஏதோ சொல்வார்கள் ஒன்றும் நடக்காது.

கிட்டதட்ட 2 கோடி மக்கள் மாண்டார்கள், அன்றைய இந்திய (பாகிஸ்தான்,வங்கதேசம் இணைந்து) மக்கள் தொகை 10 கோடி. கவனியுங்கள் 5ல் ஒரு பங்கு மக்கள் மரணமடையுமளவிற்கு பஞ்சம்.

நமது பகுதி சொல்லவே வேண்டாம், இந்தியா வெள்ளத்தில் அழிந்தாலும் , 100 அடி ஆழத்தில் நாம் தண்ணீர் தேடுபவர்கள்.இன்று 500 அடி ஆழத்தில் தேடுகிறோம் அவ்வளவே.

எவ்வளவு கொடிய பஞ்சம் என்றால், காடுகளில் பறவைகள் செத்து கிடக்கின்றன, நான்குநேரிக்கு கிழக்கு பகுதியில் ஒரு வெள்ளை அதிகாரி குதிரையில் வருகிறான். ஒர் பெண் மடியில் எதையோ மறைத்து செல்கிறாள், களவு என நினைத்து மடியை பிரிக்க சொல்கிறான்

அவள் வைத்திருந்தது புற்றரிசி, எறும்ப்புகள் சேமித்து வைத்திருக்கும் ஒரு தானியம், புற்றை இடித்து எடுத்தேன்.அதனை கழுவி பிள்ளைகளுக்கு உணவாக்கி கொடுக்க போகிறேன் என்கிறாள். கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டான் அந்த அதிகாரி. அந்த அளவிற்கு பஞ்சம்

சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் கஞ்சிதொட்டிகள் (கழக அரசியல் அல்ல). கடலை,கருப்பட்டி உருண்டைகள் என மக்களுக்கு பசியாற்றிய காலம். இந்த இளைஞனுக்கு 17 வயதுதான் ஓடி ஓடி பார்க்கிறான், எங்கும் வறுமை,சாவு,சாப்பாடில்லை.

வறுமைக்கு அவனும் தப்பவில்லை, ஒரு கைகுழைந்தை மனைவியோடு பிழைப்பதற்காக மலேயா செல்கிறான், கடைசியாக அவன் அந்த மண்ணை பார்க்கும்பொழுது சொன்னது,

“இன்று என்னால் முடியவில்லை, எனக்கென்று ஒரு காலம் வரும் அன்று இப்பகுதி மக்களுக்கெல்லாம் ஏதாவது செய்வேன், இல்லை உணவாவது கொடுப்பேன்”

அவன் பின்னால் மலேய ரப்பர்தோட்ட அதிகாரி ஆனால் 1940களில் ஏராளமான வள்ளியூர் பகுதிமக்களுக்கு வேலைவாய்ப்பினை மலேயாவில் பெற்று கொடுத்தார், கொஞ்சம் பிரபலமானார். ஆதித்தனார் மற்றும் ஆதித்தனாரின் மாமனார் ஓ.ஆர் ராமசாமி போன்ற அந்நாளைய மலேய பிரபலங்களின் மதிப்பில் வாழ்ந்தார்.

மனமெல்லாம் வள்ளியூர், கனவெல்லாம் அந்த மக்களுக்கு எப்படி உதவுவது என்பது பற்றியே.

விதி வேறு வழியில் விளையாடியது, 11 பிள்ளைகளை வளர்க்கும் பெரும் பொறுப்புள்ள தந்தையானார். படிக்கவைத்தார்.வறுமைபட்டார் ஆனாலும் கனவினை விடவில்லை.

பிள்ளைகள் மிக உயரமான பதவிக்கு வந்தார்கள், ஆனால் அவருக்கு அதிலெல்லாம் மகிழ்ச்சியில்லை, காரணம் மனம் மலேயாவில் இல்லை அது வள்ளியூர் பக்கமே சுற்றியது

பணி ஓய்வு பெற்றார், பிள்ளைகள் மிக நல்ல நிலமை, எல்லோரும் சொன்னார்கள் “இங்க இருந்துட்டு ஊரையே நினைக்கிறதுக்கு ஒருவாட்டி ஊருக்கு போனால்தான் என்ன? ”

அவர் சொன்னார் “எனக்கொரு ஆசை உண்டு, வள்ளியூரில் ஒரு தொழில் தொடங்கி எல்லாருக்கும் வேலை கொடுக்கவேண்டும். அல்லது தேடி வருபவர்களுக்கு பணம் கொடுத்து தொழில் செய்ய ஊக்குவிக்க வேண்டும்
அதுவும் இல்லை என்றால் பெரிய பந்தலிட்டு எல்லாருக்கும் வயிரார சாப்பாடு போட வேண்டும், இதெற்கெல்லாம் பணமில்லை என்றால் நான் போகவே மாட்டேன்”

அவர் கனவுகண்டது பெரும் ஆசை,அதற்கேற்ற பொருள் அவரிடம் இல்லை. பெரும் மனகுறையோடு 1974ல் மரணமடைந்தார்.இறுதிவரை வள்ளியூரை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை,ஆனால் அவர் மறக்கவே இல்லை.

அவரின் கல்லறையை நான் பார்த்துகொண்டிருந்த பொழுது இந்த செய்தியை என்னோடு வந்த பெரியவர் சொன்னார், இவரோட அந்த பெரும் கனவுதான் இன்று வள்ளியூரில் முதியோர் இல்லம் நடப்பது என்றார்

உன்னால் முடியாததை உனது ரத்தம் சாதிக்கும் என்பார்கள் அல்லவா, அப்படித்தான் அவரது மூத்த மகன் வள்ளியூர் சென்று UVSS home தொடங்கி, பலபேரை இணைத்து எத்தனையோ ஆதரவற்ற பெரியவர்களை காப்பாற்றும் பெரும் காரியத்தினை செய்கிறார்

தெய்வம் கூடவேதான் இருக்கும், நமது வேண்டுதலை கேட்கும், நல்ல மனத்தோடு நினைத்தால் அதனை சந்ததி மூலமாவது நடத்திவைக்கும், அதற்கு இவர்தான் சாட்சி என்றான்

அந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்ட்டது.அவது மகனே பலரையும் ஒன்றிணைத்து UVSS home நிறுவிய திரு தங்கராஜ் அவர்கள்,

நிச்சயமாக சொல்லலாம், ஒரு கொடிய பஞ்சத்தினை பார்த்து, நம் பகுதிமக்களுக்கு ஏதாவது செய்ய நினைத்த அந்த சின்னப்பரின் ஆசை மட்டுமே நமக்கு தெரிகிறது, இன்னும் எத்தனை பெரியவர்கள் எவ்வளவு ஆசைபட்டார்களோ? அவர்களின் ஆசைகள் எப்படியெல்லாம் வள்ளியூரில் நிறைவேறி இருக்கிறது என்பன எல்லாம் அமைதியாக உறங்குகிறது

அய்யன் கோயில் படத்தினை பார்த்ததும் எதிரில் உள்ள அந்த வீடும், அந்த பெரியவரும், அவரின் கனவும் அந்த இல்லமும் நினைவில் வந்து போகிறது.

 

Posted in NEW LIFE HOME FOR AGED DESTITUTES | 1 Comment

Novemper 2013 Monthly Report

This gallery contains 8 photos.

More Galleries | Leave a comment

கடவுச் சொல். சிறுகதை

This gallery contains 1 photo.

    அ. முத்துலிங்கம் அன்று காலை விடிந்தபோது, அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சர்யமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்குத் தெரியாது. செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறுவதைப் பார்க்க அவருக்குப் பிடிக்கும். அவர் வசித்த நான்காவது மாடி, மரங்களின் உயரத்தில் இருந்தது இன்னொரு வசதி. ஜன்னலைத் திறந்தவுடன் குளிர்காற்று வீசியது. முன்னே நிற்பது … Continue reading

More Galleries | Tagged , | Leave a comment

2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி

This gallery contains 26 photos.

More Galleries | Leave a comment

முப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்

This gallery contains 22 photos.

More Galleries | Leave a comment

முப்பெரும் விழா 2013

More Galleries | Leave a comment

ஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….

oct 2 016

Posted in NEW LIFE HOME FOR AGED DESTITUTES | Leave a comment

Monthly Statement August 2013

More Galleries | Leave a comment

Monthly Statement June 2013

This gallery contains 25 photos.

   

More Galleries | Leave a comment

July 2013

Scan
Scan 3 Scan 4 Scan 1

Scan 2

Posted in NEW LIFE HOME FOR AGED DESTITUTES | Leave a comment

சட்டம் தன் கடமையை செய்யும்

This gallery contains 2 photos.

More Galleries | Tagged , , | Leave a comment

முதியோரிடம் அன்பு காட்டுவோம்

This gallery contains 1 photo.

முதியோரிடம் அன்பு காட்டுவோம்  

More Galleries | Tagged , , , , | 1 Comment

ஆதரவுள்ள முதியோர்கள்

This gallery contains 3 photos.

எவ்விதமானாலும் ஆதரவற்றோர்தானே!

More Galleries | Tagged , , , , , | Leave a comment

முதுமைக்கு மரியாதை

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , , | Leave a comment

முதியோரை அரவணைப்போம்

(நீயா நானா?..கோபிநாத்.) 15 வருஷங்களுக்கு முன்னால் சென்னை சைதாப்பேட்டையில் நண்பர்கள் நாலைந்து பேர் ரூம் எடுத்துத் தங்கியிருந்தோம். வேலை தேடுகிற நண்பர்கள், வீட்டைப் பார்த்துக்கொள் வார்கள். வேலைக்குப் போகிறவர்கள், வீட்டுச் செலவைப் பார்த்துக்கொள்வார்கள். இரவு ஒருவேளை மட்டும் யாராவது ஒருவர் சமைப்போம். வீடே அமளிதுமளிப்படும். ஒருவழியாக நள்ளிரவு சாப்பாடு பரிமாறப்படும். வாயில் வைக்க முடியாது. இருந்தாலும் பட்ஜெட்டுக்குள் … Continue reading

More Galleries | Tagged , , , | Leave a comment

Balance sheet as on 31-3-2013

This gallery contains 2 photos.

Our Home’s Audit is over and herewith the Auditor’s report for 2012-13. 

More Galleries | Tagged , , , | 1 Comment

முதுமையின் துயரங்கள்

சுதா ராமலிங்கம் கருவறை தொடங்கி கல்லறை வரையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை எல்லாவற்றிலும் கொடுமையானது, வயோதிகக் காலத்தில் பெண்கள் சந்திக்கும் துயரங்கள். உடல் ஆரோக்கியம் தொடங்கி சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரத் தேவைகள் என எல்லாவற்றிலும் பிரச்சினைகள்தான். அனைத்து வகையிலும் பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் வாழ்கின்றனர். சென்னை மாநகரக் காவல்துறை … Continue reading

More Galleries | Tagged , , | 1 Comment

Monthly Report February 2013

This gallery contains 16 photos.

Monthly Report February 2013 …

More Galleries | Leave a comment

முதியோரைப் போற்றுவோம்

This gallery contains 2 photos.

முதியோரைப் போற்றுவோம். நண்பா… கார் வாங்கிருக்கேன்!”  புது இண்டிகாவோடு வந்தார் செந்தில். ”அப்பாவுக்காக நண்பா… ரெண்டு கிட்னியும் அவருக்குப் பழுதாகிருச்சு. வாரத்துக்கு ரெண்டு தடவை டயாலிசிஸ் பண்ணணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. வந்தவாசியில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வரணும்ல… அதான் கார் வாங்கிட்டேன். ஹார்பர்ல வேலை பாத்த மனுஷன்… காலம் பூரா லோடடிச்சு எங்களைக் காப்பாத்துனவர்… எம்பது … Continue reading

More Galleries | Tagged , , , , | Leave a comment

Monthly Statement January-2013

More Galleries | Tagged , , , , , | Leave a comment